பாக். நாடாளுமன்றத்தில் அவசர கூட்டம் - இம்ரான் கான் வராததால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி

காஷ்மிருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று அவசரமாக கூட்டப்பட்டது.

Update: 2019-08-06 12:49 GMT
காஷ்மிருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று அவசரமாக கூட்டப்பட்டது. நாடாளுமன்றத்தில் இந்தியாவின் தீர்மானத்திற்கு எதிராக மசோதா தாக்கல் செய்ய எதிர்க்கட்சியினர் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவசர கூட்டத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வராததால் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். 
Tags:    

மேலும் செய்திகள்