உச்ச கட்ட குழப்பம் : "இலங்கையில் நடப்பது என்ன?"

உச்சகட்ட குழப்பம் நிலவும் இலங்கையின் தற்போதைய சூழல் குறித்து, அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2018-11-03 14:37 GMT
உச்சகட்ட குழப்பம் நிலவும் இலங்கையின் தற்போதைய சூழல் குறித்து, அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விளக்கம் அளித்துள்ளார். கொழும்பில் இருந்து, தொலைபேசி மூலம் பேட்டி அளித்த அவர், இலங்கையில் மீண்டும் ஒரு சர்வாதிகார ஆட்சி தலை தூக்கி உள்ளதாக கவலை தெரிவித்தார். ரணில் விக்ரமசிங்கே, ஜனநாயகத்தை மதிப்பவர் என கூறிய விஜயகலா மகேஷ்வரன், ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் மக்களை பாதுகாத்துள்ளது என்று தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்