ராஜபக்சே தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்பு

இலங்கையில் உச்சகட்ட குழப்பம் நீடித்து வரும் நிலையில், அந்நாட்டின் பிரதமர் மகிந்தா ராஜபக்சே தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது.

Update: 2018-10-29 23:08 GMT
இலங்கையில் உச்சகட்ட குழப்பம் நீடித்து வரும் நிலையில், அந்நாட்டின் பிரதமர் மகிந்தா ராஜபக்சே தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது. தலைநகர் கொழும்பில், இரவு நடைபெற்ற பதவியேற்பு விழாவில், இலங்கை அதிபர் மைத்ரிபாலா ஸ்ரீ சேனா முன்னிலை வகித்தார்.
பிரதமர் மகிந்தா ராஜபக்சேவுக்கு நிதி மற்றும் பொருளாதாரத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. நிமல் ஸ்ரீ பால டி - சில்வா - போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சராகவும், மிகிந்த அமிர வீரா - விவசாயத்துறை அமைச்சராகவும் பதவியேற்றனர். டக்ளஸ் தேவானந்தாவுக்கு, புனர் வாழ்வு - மீள் குடிமயர்வு - வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து அலுவல்கள் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்