திருச்செந்தூரை மூழ்கடித்த மக்கள் வெள்ளம்.. வரலாறு காணாத அளவில் குவிந்த பக்தர்கள் - இரவு வரை காத்திருந்து தரிசனம்

Update: 2024-04-24 03:09 GMT

சித்ராபெளர்ணமியையொட்டி, திருச்செந்தூர் கடற்கரையில், வரலாறு காணாத அளவிற்கு பக்தர்கள் குடும்பத்துடன் அமர்ந்து, சந்திரனை தரிசித்து வழிபட்டனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து முருகனை தரிசித்து வழிபட்டனர். பின்னர், இரவு நேரத்தில் கடற்கரை மணலில் குடும்பத்தாரோடு அமர்ந்து அங்கேயே படுத்து உறங்கி, நள்ளிரவில் சந்திரனை தரிசனம் செய்தனர். கடற்கரை மணலில் பள்ளம் தோண்டி, அகல் விளக்குகளை வைத்து ஏற்றி ஆங்காங்கே பக்தர்கள் வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்