"மதிமுக தொண்டர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்" - முதல்வர் ஸ்டாலின்

Update: 2024-03-28 07:38 GMT

ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி மறைந்ததை அறிந்து, அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஆற்றல்மிகு தள கர்த்தராகச் செயல்பட்ட அவரது இழப்பு சொல்லொணாத் துயரத்தைத் தருகிறது என்றும், அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும் மதிமுக தொண்டர்களுக்கும், ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்