கொதித்து கொண்டிருந்த கெமிக்கல்... உள்ளே விழுந்த இளைஞர் துடிதுடித்து பலி...

Update: 2024-04-27 12:05 GMT

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே, கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில், 55 டிகிரி கொதிநிலையில் இருந்த கெமிக்கலுக்குள் தவறி விழுந்து பணியாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கத்தில் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் உள்ள கெமிக்கல் தொட்டியில், 55 டிகிரி கொதிநிலையில் சோடியம் ஹைட்ராக்சைடு நிரப்ப பட்டிருந்ததாகவும், அதற்கு தண்ணீர் சப்ளை செய்யும் இயந்திரம் திடீரென பழுதானதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு பணிபுரிந்து வந்த 20 வயது இளைஞர் பிரவீண் குமார் என்பவர் இயந்திரத்தை சரி செய்வதற்காக தொட்டி மீது ஏறிய நிலையில், திடீரென தொட்டிக்குள் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த 20 வயது இளைஞர் உயிரிழந்த இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்