சாப்பாடு கேட்பதுபோல் நடித்து கைவரிசை... கணவனை இழந்த மூதாட்டிக்கு ஏற்பட்ட சோகம்

Update: 2024-05-09 02:35 GMT

சென்னையில், தனியே வசித்து வந்த மூதாட்டியிடம் சாப்பாடு கேட்பது போல் நடித்து, அவர் காதில் அணிந்திருந்த 6 கிராம் கம்மலை பறித்துச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் அரங்கேறிய இந்த சம்பவத்தில், கணவரை இழந்து தனியே வசித்து வந்த பத்மாவதி என்ற மூதாட்டியிடம் மர்மநபர் கைவரிசை காட்டியிருக்கிறார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வரும் போலீசார், அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மர்மநபரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்