பேருந்து மேற்கூரை மீது ஏறி ரகளை.. கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் அதிரடி

Update: 2024-05-09 02:45 GMT

சென்னை பல்லவன் சாலையில், பேருந்து மேற்கூரை மீது ஏறி ரகளையில் ஈடுபட்ட மாநில கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திரு.வி.க.நகர் நோக்கி சென்று கொண்டிருந்த அந்த பேருந்து, பல்லவன் சாலை அருகே சென்றபோது, மாநில கல்லூரி மாணவர்கள் பேருந்தின் மேற்கூரை மீது ஏறி ரகளையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து, திருவல்லிக்கேணி போலீசார், மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்