பக்கத்து வீட்டுக்காரர் வாங்கித் தந்த பிரியாணி... பார்சலை பிரித்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Update: 2024-05-09 02:26 GMT

ஊட்டியில் பிரபல உணவகம் ஒன்று, கெட்டுப் போன சிக்கன் பிரியாணியை வழங்கியதாக, பெண் வாடிக்கையாளர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். அந்த உணவகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். லியோ என்ற அந்த பெண், பக்கத்து வீட்டுக்காரர் வாங்கித் தந்த பிரியாணி பார்சலை பிரித்த போது, அது துர்நாற்றம் வீசியுள்ளது. கெட்டுப் போன அந்த பிரியாணியை எடுத்துக் கொண்டு, உடனே சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சென்று இது குறித்து கேள்வி கேட்டுள்ளார். மேலும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்