12 நாளில் ரூ.3.38 கோடி அபேஸ்.. கதிகலங்கி நிற்கும் புதுச்சேரி மக்கள்

Update: 2024-01-14 14:12 GMT

புதுச்சேரியில் புத்தாண்டில் 3 கோடியே 38 லட்சம் ரூபாய் பணத்தை, இணையவழியில் 58 பேர் இழந்துள்ளனர்.

புதுச்சேரியில் இணைய வழியில் பணமோசடி செய்வது அதிகரித்து வருவதாக சமீபத்தில் புகார்கள் வெளியாகின. இந்நிலையில் புத்தாண்டு பிறந்து முதல் 12 நாட்களில், 58 பேர் 3 கோடியே 38 லட்சம் ரூபாயை இணையவழியில் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணத்தை இழந்தவர்கள் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் போலீசார், அதிக வருமானம் கிடைக்கிறது என எண்ணி, இணையவழி மோசடிக்காரர்கள் சொல்வதை நம்பி முதலீடு செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்