கல்லூரி இறுதி நாளில் பேராசிரியரை கட்டிப்பிடித்து கதறிய மாணவன்... ஒரு நொடி உறைந்து போன சக நண்பர்கள்

Update: 2024-04-27 07:29 GMT

விருதுநகரில் கல்லூரி இறுதி நாளன்று தனது பேராசிரியரை பிரிய மனமின்றி மாணவர் ஒருவர் கதறி அழுதுள்ளார்.

சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வழியனுப்பு விழா நடைபெற்றது. அப்போது, மாணவன் கணேஷ்குமார், தனது பேராசிரியர் மகேஷ்வரனை பிரிய மனமின்றி, அவரை கட்டியணைத்து அழுதுள்ளார். அவரை, சக மாணவர்கள் மிகவும் சிரமப்பட்டு, பேராசிரியரிடம் இருந்து பிரித்து அழைத்து சென்றனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்