சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்காக புதிய தடுப்பூசி மையம் திறப்பு

சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்காக புதிய தடுப்பூசி மையத்தை விமான நிலைய இயக்குனர் திறந்து வைத்தார்.

Update: 2022-01-13 02:15 GMT
சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்காக புதிய தடுப்பூசி மையம் திறக்கப்பட்டுள்ளது. சென்னை மீனம்பாக்க்கம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களில் பயணிகள், பொதுமக்கள் வசதிக்காக கொரோனா தடுப்பூசி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. தமிழக பொது சுகாதார துறை சென்னை விமான நிலைய ஆணையகத்துடன் இணைந்து காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் வகையில் தடுப்பூசி மையத்தை அமைத்தது. இந்த தடுப்பூசி மையத்தை விமான நிலைய இயக்குனர் சரத்குமார் திறந்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்