தமிழகம் வந்த 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பா? | Omicron

தமிழகத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு என சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரவுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2021-12-03 07:28 GMT
தமிழகத்தில் 2 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு என சமூக வலைதளத்தில் தவறான தகவல் பரவுவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் தடுப்பு நவடிக்கை  குறித்து சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிங்கப்பூர், இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த இரண்டு பயணிகளுக்கு கொரோனா உறுதியானதை தொடர்ந்து,அவர்களின் மாதிரி பெங்களூருக்கு அனுப்பி மரபியல் பரிசோதனை செய்யப்பட உள்ளதாக கூறினார். இருவருக்கும் ஒமிக்ரான் வைரஸ் உறுதி என்றால், அரசு முறைப்படி தெரிவிக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்