"மாற்று இடங்களில் வீடு வழங்க வேண்டும்" - குன்னூர் மக்கள் கோரிக்கை

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மழை நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள், தங்களுக்கு மாற்று இடங்களில் வீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Update: 2021-11-20 09:04 GMT
நீலகிரி மாவட்டம் குன்னூரில் மழை நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள், தங்களுக்கு மாற்று இடங்களில் வீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர். குன்னூரில் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இந்நிலையில், மைனலா பகுதியில் வசிக்கும் 36 குடும்பங்கள் நிலச்சரிவு ஏற்படும் இடங்களில் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லநள்ளியில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை நீலகிரி எம்.பி. ஆ.ராசா, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் நேரில் சந்தித்து உதவி செய்தனர். இந்நிலையில், தாங்கள் நிரந்தரமாக தங்குவதற்கு மாற்று இடங்களில் வீடு வழங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்