காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர் மழை - 114 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டின

தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 114 ஏரிகள் முழுவதும் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-11-06 17:43 GMT
தொடர் மழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 114 ஏரிகள் முழுவதும் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் 381 ஏரிகள் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.

வடகிழக்கு பருவமழை மற்றும் பாலாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதாலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் வேகமாக  நிரம்பி வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 114 ஏரிகள்  முழு கொள்ளளவை எட்டியுள்ளதாகவும், மேலும், 87 ஏரிகள் 75 சதவீதமும், 65 ஏரிகள் 50 சதவீதமும் நிரப்பியுள்ளதாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்