மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த கணவன் - மகன்களுடன் தர்ணாவில் ஈடுபட்ட தாய்

செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கம் பகுதியில் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்த கணவன் தங்கி இருக்கும் குடியிருப்பு முன் மகன்களுடன் மனைவி தர்ணாவில் ஈடுபட்டார்.

Update: 2021-10-20 07:34 GMT
கடலூர் மாவட்டம்  செம்மண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் ஜாய் தாசன். இவருக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு பால்தாசன் என்பவருடன் திருமணம் நடைபெற்ற  நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பால்தாசன் கடந்த 2014 ஆம் ஆண்டு மாயமான நிலையில் ஜாய் தாசன் கடந்த 7 ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது கணவர் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாகவும் அவர்கள் இருவரும் ஒன்றாக வசித்து வருவதாகவும் ஜாய் தாசனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால், கோபம்  அடைந்த ஜாய்தாசன் தனது கணவர் தங்கி இருக்கும் குடியிருப்பு முன்பு தனது 2 மகன்களுடன் தர்ணாவில் ஈடுபட்டார். இதனையடுத்து, அங்கு வந்த போலீசார், ஜாய் தாசன் உடன் பேச்சுவார்த்தை நடத்தி புகார் மனுவை பெற்றுக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்