உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் தம்பதி பலி

நாகை மாவட்டம் அந்தனபேட்டை கிராமத்தில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் பாய்ந்ததில் தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2021-10-19 03:26 GMT
அந்தனபேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பழனிவேல்-ராஜலட்சுமி தம்பதி நாகை துறைமுகத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தனர். இன்று காலை உணவு தயார் செய்து கொண்டிருந்த ராஜலட்சுமி நண்டு கழுவுவதற்காக வீட்டின் பின்புறம் சென்றுள்ளார். அப்போது திடீரென உயர் அழுத்த மின் கம்பி அறுந்து ராஜலட்சுமி மீது விழுந்துள்ளது. மனைவி காப்பாற்ற சென்ற கணவன் கையால் மின்கம்பியை தட்டிவிட்ட போது, அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். ஒரே நேரத்தில் மின்சாரம் பாய்ந்து தம்பதி உயிரிழந்த சம்பவம் அந்தனபேட்டை கிராமமக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்