பூட்டிய வீட்டில் நடந்த பயங்கர கொள்ளை - திருடிய களைப்பில் படுத்து உறங்கிய மர்மநபர்கள்...நாகை அருகே..

Update: 2024-05-08 16:06 GMT

நாகை அருகே நாகூரில் பூட்டியிருந்த வீட்டில் 110 சவரன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தாவூத் பாத்திமா என்பவர் அவரது தம்பி வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. இதுகுறித்து நாகூர் நகர காவல் நிலையதில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் கொண்டு தீவிர சோதனை நடத்தியதில், கொள்ளையர் திருடிய களைப்பில் வீட்டின் பின்பக்கம் படுத்து உறங்கி சென்றதும் தெரிய வந்தது. இதனையடுத்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்