5 ஆண்டுக்கு பின் நடைபெற்ற மீன்பிடித் திருவிழா - பல்வேறு வகையான மீன்களை அள்ளி சென்ற மக்கள்

Update: 2024-05-08 16:13 GMT

மதுரை அருகே 5 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற மீன் பிடித்திருவிழாவில் ஏராளமானோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர். திருமங்கலத்தை அடுத்த குராயூர் கிராமத்தில் அமைந்துள்ள பெரிய கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. இதில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு குறவை, கட்லா, கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்களை பிடித்து மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்