முன்விரோத தகராறில் ரவுடி கொலை - திருந்தி வாழ்ந்தவரை கொன்ற கும்பல்

சென்னையில் முன்விரோதம் காரணமாக திருந்தி வாழ்ந்த ரவுடியை கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2021-10-12 09:56 GMT
சென்னை மணலி எடப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குட்டி என்ற ராஜசேகர். கடந்த 2018ல் கோபால் என்பவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான இவர், திருந்தி வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இவர் சின்னசேக்காடு பகுதியில் தன் நண்பர்கள் சிலரோடு சேர்ந்து மது அருந்தியதாக தெரிகிறது. அப்போது திடீரென அவர்கள் குட்டியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த குட்டி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்