ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் - ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் மனு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி ஆதரவாளர்களும், அந்த ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி எதிர்ப்பாளர்களும் ஒரே நாளில் மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-09-13 21:24 GMT
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி ஆதரவாளர்களும், அந்த ஆலையை  நிரந்தரமாக மூடக்கோரி எதிர்ப்பாளர்களும் ஒரே நாளில் மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலை இயங்கிய போது கல்வி, மருத்துவம் தொழில் தொடங்க உதவிகள் செய்யப்பட்டதாக ஆலை ஆதரவாளர்கள் 
மனுவில் தெரிவித்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடபோவதாக எதிர்ப்பாளர்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்