தாக்குதல் நடத்திய கடற்கொள்ளையர் - படுகாயமடைந்த மீனவர்கள்

காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர் நடத்திய தாக்குதலில் 3 மீனவர்கள் படுகாயமடைந்தனர்.

Update: 2021-09-04 13:43 GMT
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கிளிஞ்சல்மேடு, காரைக்கால் மேடு, கோட்டுச்சேரி மேடு உள்ளிட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த  மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர். 
அப்போது, படகில் இருந்தவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்கொள்ளையர் படகில் இருந்த மீனவர்கள் மீது அரிவாளால் தாக்குதல் நடத்தி  ஜிபிஎஸ் கருவி, டீசல், மீன்களை கொள்ளையடித்து சென்றனர். இதில் 3 மீனவர்கள் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து கரை திரும்பிய 11 மீனவர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதல் குறித்த மீனவர்கள் அளித்த புகாரின் பேரில் காரைக்கால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்