சத்தமின்றி அரங்கேறும் சம்பவங்கள்.. முதல்வரின் நேரடி கவனத்திற்கு பறக்கும் புகார்கள்

Update: 2024-05-07 11:46 GMT

தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளிடம் புகார் அளித்துள்ளார். போலி நகைகளை அடமானம் வைத்து ஏமாற்றும் கும்பல்களால் தமிழகத்தில் ஏராளமான பான்புரோக்கர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் இயங்கி வரும் நகை அடகு நிறுவனத்தில் இளம்பரிதி மற்றும் விடுதலை வேங்கை ஆகியோர் போலி நகைகளை அடமானம் வைத்து 6 லட்சத்து 93 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்று சென்றுள்ள நிலையில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகார்கள் குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உறுதியளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்