ஓட்டு போட்டு வந்ததும்.. ``தேர்தல் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்'' என சொன்ன மோடி

Update: 2024-05-07 11:43 GMT

இந்தியாவின் தேர்தல் நடைமுறை உலக ஜனநாயகத்திற்கே முன்னுதாரணமாக திகழ்கிறது என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்...

3ம் கட்ட மக்களவைத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், வாக்களித்து விட்டு வெளியே வந்து பேசிய பிரதமர் மோடி நேற்று இரவுதான் ஆந்திராவில் இருந்து தான் குஜராத் வந்து சேர்ந்ததாகவும், இங்கிருந்து அடுத்ததாக மத்திய பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக செல்ல இருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்தியாவின் தேர்தல் நடைமுறை மற்றும் தேர்தல் மேலாண்மை உலக ஜனநாயகத்திற்கு முன்னுதாரணமாக திகழ்வதாக பெருமிதம் தெரிவித்த பிரதமர் மோடி உலகின் மிகப் பெரும் பல்கலைக்கழகங்கள் இது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். உலகின் 64 நாடுகளில் தேர்தல் நடைபெற்று வருவதாக தெரிவித்த பிரதமர், அனைத்து நாடுகளின் தேர்தல்கள் குறித்தும் ஒப்பீடு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்