கொரோனாவுக்கு பலியான போலீசாருக்கு அஞ்சலி - 3 மாத‌த்தில் 19 காவலர்கள் உயிரிழப்பு

சென்னையில் கடந்த 3 மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு உதவி ஆணையர் உள்பட 19 போலீசார் உயிரிழந்தனர்.

Update: 2021-07-31 17:05 GMT
சென்னையில் கடந்த 3 மாதங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒரு உதவி ஆணையர் உள்பட 19 போலீசார் உயிரிழந்தனர். இவர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் உயிரிழந்த காவலர்களின் உருவப்படத்திற்கு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உட்பட காவல்துறை அதிகாரிகள், கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்