சொத்து தகராறு - தந்தையை வெட்டிய மகன்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை, மகனே வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.

Update: 2021-07-21 13:37 GMT
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சொத்து தகராறில் தந்தையை, மகனே வெட்டிய நிலையில், இது தொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.  
ஆரோக்கியசாமிக்கும், அவரது 3 மகன்களுக்கும் சொத்துகளை பிரிப்பது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதில் ஆரோக்கியசாமியின் 3வது மகன் லூர்துராஜ் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஏற்பட்ட மோதலில், லூர்துராஜ், ஆரோக்கியசாமியை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். தடுக்க வந்த தாய் மற்றும் சகோதரனையும் அரிவாளால் வெட்டியுள்ளார். குடும்பமே ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கி கொண்டதால், பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இது தொடர்பான வீடியோ பரவி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்