ஹெச்.ராஜா முன் ஜாமின் மனு தள்ளுபடி.. நீதிமன்றத்தை அவதூறாக பேசியதாக வழக்கு

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

Update: 2021-07-19 14:33 GMT
ஹெச்.ராஜா முன் ஜாமின் மனு தள்ளுபடி.. நீதிமன்றத்தை அவதூறாக பேசியதாக வழக்கு

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.கடந்த 2018ஆம் ஆண்டு, விழா ஒன்றில், நீதிமன்றத்தையும், காவல்துறையினரையும் அவதூறாக பேசியதாக ஹெச்.ராஜா மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நேரில் ஆஜராகி ஹெச்.ராஜா மன்னிப்பு கோரினாா். இந்நிலையில், முன் ஜாமின் கோரி அவர் தாக்கல் செய்த மனுவில், ஜூலை 23ஆம் தேதி நேரில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், அவர் தான் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறி ஜாமின் வழங்க கோரியிருந்தார். இந்த மனு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஹெச்.ராஜாவின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்