தமிழகத்தில் மேலும் 15,684 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 15 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

Update: 2021-04-26 20:54 GMT
தமிழகத்தில் ஏப்ரல் 17ஆம் தேதி, ஒரு நாள் கொரோனா பாதிப்பு 9 ஆயிரத்து 344 ஆக இருந்த நிலையில், தற்போது ஒரு நாள் கொரோனா பாதிப்பு 15 ஆயிரத்து 684 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு 10 லட்சத்து 97 ஆயிரத்து 672 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் 94 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 13 ஆயிரத்து 651 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 145 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒரு நாளில் 13 ஆயிரத்து 625 பேர் குணமடைந்துள்ளனர். இதனிடையே தமிழகத்தில் 15 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், 12 வயது வரை உள்ள சிறார்களில் புதிதாக 519 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்