"ஆம்புலன்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்" - சுகாதாரத்துறை வட்டாரம் தகவல்

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களில் ஆம்புலன்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என சுகாதாரத்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-22 08:34 GMT
தமிழகத்தில் அடுத்த இரு தினங்களில் ஆம்புலன்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என சுகாதாரத்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா நோயாளிகளை மட்டும் அழைத்து வர 210 அவசர வாகனங்கள் இயங்குவதாகவும், தேவைக்கேற்ப இது மேலும் அதிகப்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. ஆம்புலன்ஸ் சேவைக்காக 24 மணி நேரமும் தனி கட்டுப்பாட்டு அறை இயங்குவதாகவும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்