தமிழகத்தில் மேலும் 2,194 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு மீண்டும் இரண்டாயிரத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு மீண்டும் இரண்டாயிரத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 194 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,
மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 79 ஆயிரத்து 473 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவுக்கு மேலும் 11 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 670 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது 13 ஆயிரத்து 70 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே தமிழகத்தில் இதுவரை 15 பேருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் மேலும் 833 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,
மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரத்து 339 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் கொரோனாவில் இருந்து மேலும் 439 பேர் குணமடைந்துள்ள நிலையில், மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.