தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி - வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து செயல்முறை
திண்டுக்கல் மாவட்டம் பழனியில், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பழனி தொகுதியில் உள்ள 405 வாக்குச்சாவடிகளில் பணிபுரிய இருக்கும் 48 மண்டல அலுவலர்கள் மற்றும் துணை மண்டல அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் செயல்பாடு, குளறுபடி ஏற்பட்டதால் அதை எப்படி சரி செய்வது உள்ளிட்டவை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.