மாமியாருக்கு பொறி... மாட்டிய மருமகள்... கொலையாளிகளாக மாறிய கொள்ளையர்கள்

மாமியாரை குறி வைத்து மருமகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-03-01 04:09 GMT
மாமியாரை குறி வைத்து மருமகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

சென்னை அமைந்தக்கரையை சேர்ந்த ஜெயந்தியின் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல் ஜெயந்தி மற்றும் அவரது மகளை சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பினர். இதில் ஜெயந்தி பரிதாபமாய் உயிரிழந்து விடவே, பலத்த காயங்களுடன் அவரது மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அமைந்தகரை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், தாம்பரத்தில் கடந்த ஜனவரி மாதம் ரவி என்பவரது வீட்டில் 4 சவரன் நகை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக, அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து புளியந்தோப்பைச் சேர்ந்த அந்தோணி குமார் மற்றும் நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்த பாலாஜி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில், அமைந்தகரையில் நடந்த கொலையை செய்ததும் தாங்கள் தான் என்று தெரிவித்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்