சென்னையில் அமேசானின் உற்பத்தி ஆலை - முதலமைச்சர் பழனிசாமி வரவேற்பு

சென்னையில் தமது முதல் உற்பத்தி ஆலையை துவங்க உள்ள அமேசான் நிறுவனத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2021-02-17 11:33 GMT
அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான அ​மேசான், இந்தியாவில் உற்பத்தி ஆலையை துவங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக சென்னையை தேர்வு செய்துள்ளதாக தெரிவித்துள்ள அந்த நிறுவனம், தமது ஆலையில் ஃபயர் டிவி ஸ்டிக்குகளின் ரிமோட்களை தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை வரவேற்று டிவிட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி, சென்னையில் தொழிற்சாலை அமைக்கப்படுவதை வரவேற்றுள்ளார். இதன் மூலம், ஏராளமான இளைஞர்களுக்கு நிச்சயம் வேலை வாய்ப்பு கிடைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்