அரசு மருத்துவர்களுக்கு தமிழக அரசு 50 சதவீத இட ஒதுக்கீடு - நடப்பாண்டு வழங்காமல் சேர்க்கையை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பாண்டு வழங்காமல் சேர்க்கையை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-11-27 12:27 GMT
சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத  இட ஒதுக்கீடு வழங்கும் வகையிலான தமிழக அரசின் அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்து பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஒடிசா, தமிழகம், உத்தர பிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 13 தனியார் மருத்துவர்கள், மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாரணையை மேற்கொண்ட,  உச்சநீதிமன்ற நீதிபதி எல் நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு, சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை நடப்பாண்டு வழங்காமல் சேர்க்கையை நடத்த வேண்டும் என உத்தரவிட்டது. மேலும், இந்த மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கிறோம் என அறிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்