"ஒரு நாள் மழைக்கே வெள்ளக்காடான சென்னை" - தமிழக அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு காட்டிய அலட்சியமே, ஒரு நாள் மழை வெள்ளத்திற்கு காரணம் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அரசு காட்டிய அலட்சியமே, ஒரு நாள் மழை வெள்ளத்திற்கு காரணம் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பான அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்னும் தொடரப்போகும் வடகிழக்குப் பருவமழையால், சென்னை மீண்டும் ஒரு வெள்ள அபாயத்தை சந்திக்கப் போகிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.