திருமாவளவன் மீது வழக்கு - ஸ்டாலின் கண்டனம்

திருமாவளவன் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2020-10-24 09:28 GMT
மனுதர்மம் குறித்து பேசிய விவகாரத்தில், திருமாவளவன் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பதற்கு, கண்டனம் தெரிவித்துள்ளார். திருமாவளவனின் கருத்தை திரித்து கூறியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ள ஸ்டாலின்,

காவல்துறையின் பாரபட்சமான அணுகுமுறையை இது காட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.பெண்களின் உரிமைகள் பல்லாண்டுகளாக மறுக்கப்பட்டு வந்ததை மேற்கோள்காட்டியே திருமாவளவன் பேசியதாகவும்,அவர் மீதான பொய் வழக்கை உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும், ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்