கவிஞர் அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி காலமானார்

கடந்த 24ஆம் தேதி ஞானபீட விருது பெற்ற கேரளாவை சேர்ந்த கவிஞர் அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி காலமானார்.

Update: 2020-10-15 10:47 GMT
கடந்த 24ஆம் தேதி ஞானபீட விருது பெற்ற கேரளாவை சேர்ந்த கவிஞர் அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி காலமானார். அவருக்கு வயது 94. கேரள மாநிலம் பாலக்காட்டில் பிறந்த இவர், மலையாளத்தில் சிறுகதை, கவிதை, நாடகம் என ஏராளமான படைப்புகளை வழங்கியுள்ளார். மேலும் இவர், சாகித்திய அகாடமி, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். இந்த நிலையில், கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்