ஜம்முவில் இறந்த ராணுவ வீரர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

காஷ்மீரில் இறந்த ராணுவ வீரர் முல்லைராஜின் உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள், சாலைமறியலை கைவிட்டனர்

Update: 2020-10-13 10:31 GMT
ஆயாள்பட்டி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் முல்லைராஜ் இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு தொலைபேசியில் தகவல் வந்தது. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், ராணுவ வீரர் இறந்ததற்கான காரணம் குறித்து முறையான விளக்கம் அளிக்க வலியிறுத்தி, சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் சங்கரன்கோவில் வட்டாட்சியர், கோட்டாட்சியர்,  ராணுவ அதிகாரி ஒருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு, சுமூக முடிவு எட்டப்பட்டது. இதையடுத்து ராணுவ வீரர் முல்லைராஜின் உடலை பெற்றுக் கொண்ட உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்