பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் இடமாற்றம் - நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் என விளக்கம்
பெரியார் பிறந்த நாளன்று சிலைக்கு மாலை அணிவித்த குற்றச்சாட்டில் சிக்கிய மூன்று காவலர்கள் இடமாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்
கடந்த 17ஆம் தேதி தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா கடைபிடிக்கப்பட்ட போது கடலூர் அண்ணா பாலம் அருகே அமைந்துள்ள பெரியார் சிலைக்கு காவலர்கள் ரஞ்சித், ரங்கராஜன் மற்றும் அசோக் ஆகிய காவல்கள் மாலை அணிவித்து அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருந்தனர். அப்போது அவர்கள் சீருடையில் இல்லாவிட்டாலும் மூவரும் மாலை அணிவித்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது,. இந்த நிலையில் காவலர்கள் 3 பேரையும் கடலூர் மாவட்டத்தில் இருந்து கள்ளகுறிச்சி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவிட்டுள்ளார். நிர்வாக காரணங்களுக்காக அவர்கள் 3 பேரும் இடமாற்றம் செய்யப்படுவதாக அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.