கொரோனாவால் உயிரிழந்தவர் உடல் தோண்டி எடுப்பு - உடல் உறுப்புகள் திருடப்பட்டதாக புகார்

தஞ்சையில் தனியார் மருத்துவமனை மீது சுமத்தப்பட்ட உடல்உறுப்பு திருட்டு புகாரால் கொரோனாவால் இறந்தவர் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2020-09-25 04:59 GMT
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் சலீம் கடந்த ஜூலை மாதம் 29 ஆம் தேதி கொரோனா தொற்றால் உயிரிழந்த‌தாக கூறப்படுகிறது. ஆனால் இதனை ஏற்க மறுத்த சலீமின் உறவினர்கள், மரணத்தில் மர்ம‌ம் இருப்பதாகவும், உடலை தோண்டி எடுக்க வேண்டும் எனவும் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர்.  இதையடுத்து, பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தரணிகா முன்னிலையில் சலீமின் உடல், தோண்டி எடுக்கப்பட்டு, உடற்கூறு ஆய்வுக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. அவரது உடல் பாகங்கள் திருடப்பட்டதா? எப்படி இறந்தார் என்பது பிரேத பரிசோதனைக்கு பிறகே தெரிய வரும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்