"தவறான விபரீத முடிவுகளை எடுக்க வேண்டாம்" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற ஏராளமான வாய்ப்புகள் உள்ளதால், தயவு கூர்ந்து, தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-09-13 11:45 GMT
மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற ஏராளமான வாய்ப்புகள் உள்ளதால், தயவு கூர்ந்து, தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம் என, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தருமபுரி மாணவர் ஆதித்யா மற்றும் திருச்செங்கோடு மாணவர் மோதிலால் ஆகியோர், நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டனர் என்ற துயரச் செய்திகள், வேதனையை தந்துள்ளதாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அவர்களது குடும்பத்தினருக்கு அனுதாபங்கள் தெரிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம், நீட் வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்