"பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு 9 திட்டங்கள் மத்திய அரசுக்கு பரிந்துரை" - அமைச்சர் கே.சி கருப்பண்ணன் தகவல்

பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு 9 திட்டங்களை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து இருந்த நிலையில் தற்போது இரண்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-07 10:46 GMT
பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு 9 திட்டங்களை, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து இருந்த நிலையில், தற்போது இரண்டு திட்டங்களுக்கு, ஒப்புதல் அளித்துள்ளதாக, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பண்ணன் தெரிவித்துள்ளார். ஈரோடு நடைபெற்ற விழாவில், 13 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதை அமைச்சர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான, 9 திட்டங்களுக்கு, ஆயிரத்து100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரைவில் செயல்படுத்த உள்ளதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்