சிதம்பரம் பேருந்து நிலையம் பகுதியில் ஆட்சியர் ஆய்வு - முககவசம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய ஆட்சியர்

சிதம்பரம் பேருந்து நிலையம் பகுதியில் பெரும்பாலான பொது மக்கள் வாகனங்களில் முக கவசம் அணியாமல் செல்வதை பார்த்த கடலூர் ஆட்சியர், தனது வாகனத்தை நிறுத்தி மக்களை அழைத்து முக கவசம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

Update: 2020-09-05 06:10 GMT
சிதம்பரம் பேருந்து நிலையம் பகுதியில் பெரும்பாலான பொது மக்கள் வாகனங்களில் முக கவசம் அணியாமல் செல்வதை பார்த்த கடலூர் ஆட்சியர், தனது வாகனத்தை நிறுத்தி மக்களை அழைத்து முக கவசம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். முக கவசம் அணியாமல் வந்த சிலருக்கு, முக கவசம் அளித்து, அணிந்து செல்ல அறிவுறுத்தினார். அந்த பகுதியில் இருந்த பழச்சாறு கடையில்,   சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் அமரவைக்கப்பட்டு இருந்த நிலையில்,  கடை ஊழியர்களுக்கு ஆட்சியர் எச்சரிக்கை விடுத்தார். கடலூர் செல்லும் வழியில், இரவில் திடீரென முககவசம் தொடர்பாக ஆட்சியர் மேற்கொண்ட நடவடிக்கை மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்