லஞ்சம் கேட்டதாக பெண் அதிகாரி மீது புகார் - ஊரக வட்டார வளர்ச்சி தனி அலுவலர் கைது

மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஐந்து மணி நேரம் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார், ஊரக வட்டார வளர்ச்சி தனி அலுவலர் கல்யாணியை கைது செய்தனர்.

Update: 2020-08-27 06:53 GMT
மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஐந்து மணி நேரம் சோதனை நடத்திய  லஞ்ச ஒழிப்பு போலீசார், ஊரக வட்டார வளர்ச்சி தனி அலுவலர் கல்யாணியை கைது செய்தனர். பெண் அதிகாரியிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் பணத்தை அவர்கள் பறிமுதல் செய்தனர். புதிய வீடு கட்டுவதற்கான அனுமதி சான்று வழங்க லஞ்சம் கேட்கப்படுவதாக பாக்கம் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்