சென்னையில் ரவுடி சங்கர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை - கைது செய்ய சென்ற போலீசாரை தாக்கியதால் நடவடிக்கை

சென்னையில் பிரபல ரவுடி அயனாவரம் சங்கரை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-08-21 09:13 GMT
சென்னை அயனாவரத்தை சேர்ந்த ரவுடி சங்கர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் ஒரு வழக்கு தொடர்பாக நியூ ஆவடி சாலையில் பதுங்கியிருந்த ரவுடி சங்கரை பிடிக்க போலீசார் சென்றனர். அயனாவரம் காவல் ஆய்வாளர் நட்ராஜ் மற்றும் காவலர் முபாரக் உள்ளிட்டோர் சென்ற போது தான் வைத்திருந்த அரிவாளால் காவலர் முபாரக்கை ரவுடி சங்கர் வெட்டியுள்ளார். இதை பார்த்த போலீசார் உடனே ரவுடி சங்கரை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்தனர். இதில் 3 குண்டுகள் பாய்ந்ததில் சங்கர் உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த காவலர் முபாரக் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த ரவுடி சங்கர் பிரபல ரவுடிகளான பினு, மாட்டு சங்கர் உள்ளிட்டோரின் கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

மேலும் செய்திகள்