"ஆறுதல் கூற யாரும் நேரில் வர வேண்டாம்" - திருமாவளவன் வேண்டுகோள்

தனது சகோதரி பானுமதியின் மரணத்தால் மனவேதனையில் இருக்கும் தனக்கு ஆறுதல் கூற யாரும் நேரில் வரவேண்டாம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Update: 2020-08-07 13:25 GMT
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொரோனா எவ்வளவு கொடியது என்பதை இனியாவது நாம் உணர வேண்டாமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். கொரோனாவால் இறந்தால், செத்த நாயை தூக்கி எறிவதைப்போல புதைகுழியில் எறியப்படுவோம் என்று அவர் வேதனை தெரிவித்துள்ளார். எனக்கு ஆறுதல் கூற வந்து அந்த பயணத்தின் வழியில் கொரோனா எங்காவது ஒளிந்திருந்து உங்கள்மீது பாய்ந்து குரல்வளையைக் கவ்விக் கொள்ளும் என்று குறிப்பிட்டுள்ள அவர், எனக்கு ஆறுதல் கூறுவதற்கு யாரும் தேடிவர வேண்டாம் என்றும், உங்கள் பாதுகாப்புக்காகவே இதனை கூறுவதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்