இளைஞர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் - பெண்ணின் தந்தை உட்பட 6 பேர் கைது
தருமபுரி அருகே இளைஞர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் அவர் காதலித்து மணம் புரிந்த பெண்ணின் தந்தை உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டம் கும்மனூர் பகுதியில் சாலையோரத்தில் கடந்த 1ஆம் தேதி விஜி என்ற இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது. அப்போது போலீசார் நடத்திய விசாரணையில் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் கல்லூரி மாணவியான ராஜேஷ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தது தெரியவந்தது. காவல் நிலையத்தில் நடந்த சமரச பேச்சுவார்த்தையின் போது, மாணவியின் படிப்பை காரணம் காட்டி பெண் வீட்டார் தங்கள் மகளை வீட்டுக்கு அழைத்துச் சென்ற நிலையில் திருமண பேச்சுவார்த்தைக்காக விஜியை வரவழைத்துள்ளனர். அப்போது திட்டமிட்டு அவரை வழிமறித்து மாந்தோப்புக்கு அழைத்துச் சென்று கொடூரமாக கொலை செய்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பெண்ணின் தந்தை முனிராஜ் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். .