வீடு வாடகை தொடர்பான பிரச்சினை: தீக்குளித்து இறந்த வாடகைதாரர் - சமூக வலைதளத்தில் பரவும் தீக்குளிக்கும் காட்சி

சென்னை புழல் அருகே வீடு வாடகை பிரச்சினையில் தீக்குளித்த நபர் இறந்த நிலையில் சம்பவத்தன்று நடந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Update: 2020-08-04 09:59 GMT
விநாயகபுரத்தை சேர்ந்த பெயிண்டர் சீனிவாசனை வாடகை கேட்டு போலீஸ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அவர், தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். 85 சதவீத காய​ங்களுடன் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெயிண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் இறப்பதற்கு முன் சீனிவாசன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், புழல் காவல் ஆய்வாளர் பென்சாம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், சீனிவாசன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Tags:    

மேலும் செய்திகள்