முன்விரோத மோதல் - வீடுபுகுந்த சரமாரி வெட்டிய கும்பல் - அச்சத்தை ஏற்படுத்தும் ஆவேச தாக்குதல் காட்சிகள்

நெல்லையில், வீச்சரிவாளுடன் முகத்தை மறைத்தவாறு வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர்கள் சரமாரி வெட்டி தாக்குதல் நடத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

Update: 2020-08-01 05:25 GMT
நெல்லையில் உள்ள பேட்டை அடுத்த மயிலாப்ப புரத்தைச் சேர்ந்த கொம்பையா பாண்டியன், அரிசி வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு தொழில்போட்டியால், சிலருடன் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 24ஆம் தேதி, கொம்பையா பாண்டியன் மனைவி மற்றும் அவரது மருமகள் இருவரும் வெளியில் இருந்தனர். அப்போது, திடீரென 6 பேர் கொண்ட மர்மக் கும்பல் ஒன்று வீட்டுக்குள் நுழைந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த பெண்கள் இருவரும் வீட்டுக்குள் ஓடினர். அவர்களை துரத்திய மர்மக் கும்பல், அரிவாளால் வெட்டியது. அவர்கள் அலறித் துடித்தனர். இதனிடையே, வெளியில் நிறுத்தியிருந்த சொகுசுக் காரையும் 6 பேர் கும்பல், மூர்க்கத்தனமாக வெட்டி, கண்ணாடிகளை உடைத்தது. இது தொடர்பாக பேட்டையைச் சேர்ந்த சுந்தர், மணி உள்பட நான்கு பேரை கைது செய்த நிலையில், பதில் தாக்குதல் நடத்தியதாக கொம்பையா பாண்டியன் தரப்பிலும் 4 பேரை கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்