இ-பாஸ் இல்லாமல் கொடைக்கானல் சென்ற நடிகர்கள் விமல், சூரி - பலர் மீது வழக்குப்பதிவுசெய்ய உள்ளதாக போலீஸ் தகவல்

கொடைக்கானல் நகருக்கு இ-பாஸ் இல்லாமல் வந்த நடிகர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை அழைத்து வந்த உள்ளூர் வாகனத்தினையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2020-07-30 03:41 GMT
இ-பாஸ் இல்லாமல் நடிகர்கள் விமல், சூரி மற்றும் இயக்குனர்கள், உள்ளூர் நபர்கள் உதவியுடன் கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரிக்கு அனுமதியின்றி சென்றுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு அவர்கள் மீன் பிடித்தது தொடர்பாக, கோட்டாட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில்,நடிகர்கள் உட்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணையில் இறங்கிய போலீசார், சி.சி.டிவி கேமரா மற்றும் வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடியில் உள்ள வாகன வருகை பதிவேடுகளில் உள்ள பதிவினை வைத்து, அவர்களை அழைத்து வந்த வடகவுஞ்சியை சேர்ந்த  கருப்பிச்சி நாதன் என்பவருடைய வாகனத்தை பறிமுதல் செய்தனர். அவர்களுக்கு உணவு கொண்டு சென்ற வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளர்.

Tags:    

மேலும் செய்திகள்